Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 21 November 2014

குடிமைப்பணி முதல் நிலைபயிற்சிக்கான நுழைவுத்தேர்வு

சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்நிலை பயிற்சி்க்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு வருகிற 23-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  விருதுநகர் மாவட்டத்திலிருந்து குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தின் முதல் நிலை பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டுக்களை www.civilservicecoaching.com இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
    இதுபோன்று பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், அவர்கள் குறிப்பிட்டுள்ள மாவட்ட தேர்வு மையத்திற்கு தேர்வு நடைபெறும் நாளில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக சென்று நுழைவுச் சீட்டுக்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், சென்னை மாவட்டத்தைச் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் 044-24621475 அல்லது 9940636267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தேர்வு மைய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments: