Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 24 July 2015

ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தருவார்!

மாணவர்களுக்கு இருப்பிடஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை,பள்ளிகள் மூலமே வாங்கித் தரபள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவமாணவியருக்கு பல திட்டங்களுக்காகஜாதிஇருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

கல்வி உதவித் தொகைஇலவசத் திட்டங்கள் போன்றவற்றை வழங்க,இந்த சான்றிதழ்கள் அவசியம். ஆனால்இந்த சான்றிதழ்களைஆன்-லைன் மூலம் பெறுவதில் தாமதம்
ஏற்படுகிறது. எனவேபள்ளிகள் மூலமே சான்றிதழ் வாங்கித் தரபள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளும்மாணவமாணவியரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை,தனித்தனி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்துஉரிய முகவரி ஆவணங்களுடன்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும், 31ம் தேதிக்குள்தமிழக அரசின் பொது இ - சேவைத் துறை மூலம் சான்றிதழ்களை பெற்றுத் தர,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments: