Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 2 August 2015

TNTEU: பி.எட்., மாணவர் சேர்க்கை; ஆக., 7க்குள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்.,படிப்புகளுக்குநாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்றவேண்டும் எனஅனைத்து மாநிலங்களுக்கும்தேசிய ஆசிரியர்கல்வியியல் கவுன்சிலானஎன்.சி.டி.., உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு எதிராகதனியார் கல்வியியல் கல்லூரிகள்,உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனஆனாலும்இந்த ஆண்டுமுதல் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன்தமிழகத்தில் உள்ள, 690கல்லூரிகளுக்கும் என்.சி.டி.., அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த ஆண்டு முதல்புதிய விதிமுறைகள் தான் பின்பற்றப்படும்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இதில்முடிவுகள் மாறும் எனதமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளதுஎனவேஇந்த ஆண்டு இந்தப்படிப்புகள்ஓர் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாறுகிறதுஇதற்கான புதிய பாடத்திட்டமும்அமலாகிறது.
பி.எட்., மாணவர் சேர்க்கை துவங்குவதில்தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைஉயர்கல்வி மன்றம்மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் இடையே முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.இதுகுறித்துகடந்த வாரம்நமது நாளிதழில் செய்தி வெளியானதுஇதையடுத்துலேடி வெலிங்டன்கல்லூரியைமாணவர் சேர்க்கை முகமையாகதமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்துஉயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டுஆசிரியர் கல்வியியல் பல்கலைமாணவர் சேர்க்கையை நடத்தியதுஅதற்குமுன்லேடிவெலிங்டன் கல்லூரியே நடத்தியதுஇந்த ஆண்டு முதல்லேடி வெலிங்டன் கல்லூரியே மாணவர் சேர்க்கைநடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
ஒற்றைச் சாளர முறையில்மாணவர் சேர்க்கையை நடத்தும் அறிவிப்புவரும் 7ம் தேதிக்குள் வெளியாகும்.நீதிமன்ற உத்தரவுக்காகஇந்த தாமதம் ஏற்பட்டுள்ளதுவேறு எதுவும் பிரச்னை இல்லை.இவ்வாறு அவர்கள்கூறினர்.

No comments: