Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 5 July 2014

TNAU: வேளாண் பல்கலை. கலந்தாய்வு: இதுவரை 1,215 பேருக்கு சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வரும் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 1,215 பேர் பல்வேறு பாடப் பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற கலந்தாய்வுக்கு 2,334 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர். இதில், 1,442 பேர் பங்கேற்றனர். 1,215 பேர் பல்வேறு பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் கோவை, மதுரை, கிள்ளிக்குளம், திருச்சியில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை படிப்புகளுக்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.

No comments: