Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 12 July 2014

உதவி பொறியாளர் தேர்வு நேர்காணலுக்கு மனிதநேய அறக்கட்டளையில் கட்டணமில்லா பயிற்சி

டிஎன்பிஎஸ்சி உதவி பொறியாளர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனிதநேய அறக்கட்டளை சார்பில் கட்டணமில்லா நேர்காணல் பயிற்சி ஜூலை 14-ல் தொடங்குகிறது.
மனிதநேயம் ஐஏஎஸ் கட்டண மில்லா கல்வியகம் மூலம் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2013-ம் ஆண்டு உதவி பொறியாளர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டு, 7.7.2014 அன்று முடிவு வெளியாகியுள்ளது.
அதில் தேர்வாகியுள்ள மாணவ, மாணவியர் மனிதநேய மையம் சார்பில் இம்மாதம் 14-ம் தேதி முதல் நடத்தப்படும் கட்டணமில்லா நேர்காணல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் புகைப்படம், நேர்முகத் தேர்வு அழைப்பாணை நகல் ஆகியவற்றுடன் உடனடியாக நேரில் வந்து (முகவரி: 28, முதல்பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35) பதிவு செய்துகொள்ளலாம். தொடர்புக்கு
044-24358373, 9840106162 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: