தாட்கோ திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, தாட்கோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிலம் வாங்குவது, தொழில்கள் தொடங்குவது, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விற்பனை நிலையம் அமைப்பது, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருந்துக்கடை, மருத்துவமனை, ரத்தப் பரிசோதனை நிலையம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் http:application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்பட்டால் அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ. 20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தாட்கோ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment