திருச்சி தேசிய சட்டப் பள்ளியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 11-ல் நடைபெறுகிறது.
இதுகுறித்து அதன் துணைவேந்தர் என். முருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில் நிகழாண்டுக்கான பி.ஏ., எல்.எல்.பி (ஹான்ஸ்), பி.காம்.,எல்.எல்.பி (ஹான்ஸ்) ஆகிய ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு தேசிய அளவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அயல்நாடுவாழ் இந்தியர்கள் மற்றும் CLAT-2014 தேர்வு எழுதிய பிசி, எம்பிசி, எஸ்ஸி, எஸ்டி மற்றும் சிறப்பு பிரிவினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சில இடங்கள் காலியாக உள்ளன. அத்தகைய பிரிவை சேர்ந்தவர்கள் www.tnnls.ac.in என்ற தேசிய சட்டப் பள்ளி இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 11-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment