Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 18 June 2014

TNPSC: குரூப்-2ஏ தேர்வு தேதியில் மாற்றமில்லை- திட்டமிட்டபடி ஜூன் 29-ல் நடக்கும்

TNPSC Logo
குரூப்-2ஏ தேர்வு ஏற்கெனவே திட்டமிடப்பட்டபடி ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பதவிகளில் 2,846 காலியிடங்களை நிரப்ப மே 18-ம் தேதி குரூப்-2ஏ தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக தேர்வு தேதி ஜூன் 29-ம் தேதிக்கும், அதேபோல் ஏப்ரல் 26-ல் நடைபெறுவதாக இருந்த குரூப்-1 தேர்வு ஜூலை 20-ம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டன.
குரூப்-2ஏ தேர்வு நடக்கும் அதே ஜூன் 29-ம் தேதி பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித் தேர்வும் நடக்க உள்ளது. ஒரே நாளில் குரூப்-2ஏ தேர்வும், நெட் தேர்வும் வருவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு மாற்றியமைக்கப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்தனர்.
குரூப்-2ஏ தேர்வு தேதி மாற்றப்படுமா? என்று டிஎன்பிஎஸ்சி செயலா ளர் மா.விஜயகுமாரிடம் கேட்ட போது, “ஏற்கெனவே திட்டமிட்டபடி குரூப்-2ஏ தேர்வை ஜூன் 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது என்று ஆணையம் முடிவெடுத்துள்ளது. எனவே, முன்பு அறிவிக்கப்பட்ட படி குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-ம் தேதியும், குரூப்-1 முதல்நிலைத் தேர்வும் ஜூலை 20-ம் தேதியும் நடக்கும்” என்று தெரிவித்தார்.

No comments: