Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 27 May 2014

INDIA POST: அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.
இது தொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.
வரும் ஜூன் முதல் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகான நுழைவுச் சீட்டை அஞ்சல் துறை அனைத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் துரித அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் (www.tamilnadupost.nic.in.) வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு வட்டார தலைமைப் பொது அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: