Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 21 December 2013

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான உடற்தகுதி தேர்வு

சென்னை பெருநகர தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 2835 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் டிசம்பர் 30ம் தேதி முதல் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 2ம் அணி, கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வேண்டியவர்களின் விவரங்கள் www.tnusrb.tn.gov.in மற்றும் www.tnpolice.gov.in இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தகுதி பதிவெண்கள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதங்கள் அவரவர் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதங்கள் வராதவர்கள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மாலை 5 மணி வரை நேரில் வந்து கடிதத்தின் நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், அழைப்புக் கடிதம் வராதவர்கள், தகுந்த அடையாளச் சான்றுடன், இணையதளத்தில் தன் பதிவெண் அடங்கிய பக்கத்தினை பதிவிறக்கம் செய்து தேர்வு மைய அதிகாரிகளை அணுகலாம்.

No comments: