Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 22 December 2013

ஐ.ஏ.எஸ். தேர்வு இலவச பயிற்சி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்

ஐ.ஏ.எஸ். தேர்வு இலவச பயிற்சி நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (டிச.23) முதல் விநியோகம் செய்யப்படும் என கோவில்பட்டி சார் ஆட்சியரும், ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சிக் குழு தலைவருமான க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:   அரசுத் துறை மற்றும் சமூக அமைப்புகளை உறுப்பினராகக் கொண்டு கோவில்பட்டியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 9-ம் தேதி கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இத்தேர்வில் பங்கு பெறுவதற்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் நாளை (டிச.23) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை கோவில்பட்டி கிளை நூலகத்திலும், மந்தித்தோப்பு சாலையில் உள்ள மாவட்ட திட்ட மேலாளர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது 2 பாஸ்போட் சைஸ் போட்டோ மற்றும் சுய முகவரியிட்ட 2 கவர்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 30-ம் தேதி என தனது அறிக்கையில் கூறியுள்ளார் அவர்.

No comments: