Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 21 July 2015

TNPSC: நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவி பொறியாளர் பணி: அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நெடுஞ்சாலைத்துறையில் 213 உதவி பொறியாளர் பணிக்கு, வரும் 12-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நெடுஞ்சாலைத்துறையில் 213 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு, சிவில் என்ஜினியரிங் பயின்றவர்கள், இன்று முதல், அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கான இணையதளத்துக்கு சென்று (http://www.tnpsc.gov.in/latest-notification.html)  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கான தேர்வு, வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காலை, மாலை என இரண்டு வேளைகளும் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: