Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 23 July 2015

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வியாழக்கிழமை முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது என்று பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் இரா.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் புதன்கிழமை விடுத்த செய்தி:

 2015-16-ம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் முதல்கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 17-ம் தேதி பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் அந்த மாணவர்களுக்கும், ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட சிறப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசால் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 அதன்படி வியாழக்கிழமை (ஜூலை 23ம் தேதி) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.  விண்ணப்பம் வழங்க கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி ஆகும்.  ஆக.7-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
 பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை முதல் ஜூலை 31-ம் தேதி வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.    பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் கு ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம் ரொக்கமாக செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்

No comments: