Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 14 July 2014

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உட்பட இந்திய மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இன்று துவங்குகிறது. இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு சில தினங்களில் துவங்க உள்ளது. இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நடப்பு கல்வியாண்டுக்கான சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,) யுனானி ( பி.யு.எம்.எஸ்.,) நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.) மற்றும் ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.) மருத்துவப் பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் இந்திய மருத்துவ படிப்புகள் உள்ள ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் வழங்கப்படும்.
எந்தெந்த கல்லூரிகள்
சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிகள்.
சென்னை அரும்பாக்கம் யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி.
மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி
நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கிடைக்க வேண்டும்.
அஞ்சல் துறை, கூரியர் நிறுவனங்களில் குறித்த நாட்களுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும் கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளாலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments: