Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 19 December 2013

லோக்பால் சிறப்பம்சங்கள்

* மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், அதிகபட்சமாக 8 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.
* அதில், 50 சதவீதம் பேர் நீதித்துறையை சார்ந்தவர்களும், மீதமுள்ளவர்கள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர் இடம் பெறுவர்.
* உறுப்பினர்களை தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.
* பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், 4 சட்ட நிபுணர்கள் (குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கும்) ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள்.
* பிரதமர் உள்பட அரசு உயரதிகாரிகளையும் விசாரணைக்கு உள்படுத்தும் அதிகாரம் படைத்தது லோக்பால்.
* லோக்பால் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டுக்குள் மாநில அரசுகள் லோக் ஆயுக்த அமைக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.
* ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் சொத்துகளை வழக்கு விசாரணையின் போதே முடக்கவும் அதிகாரம் உள்ளது.
* ஊழல் வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணை, விசாரணை அமைப்பின் விசாரணை, நீதிமன்றத்தின் விசாரணை ஆகியவற்றுக்கான கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை பெறுவது தொடர்பான வழக்குகளையும் லோக்பால் விசாரிக்கும்.
* நேர்மையான அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளை கண்காணிக்கவும், உத்தரவிடவும் லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது.
* பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு சிபிஐ இயக்குநரை தேர்வு செய்து பரிந்துரைக்கும்.
* லோக்பால் அனுமதியின்றி வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளை மாற்றம் செய்ய இயலாது.
* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைக்கும் நபர் சிபிஐ வழக்கு விசாரணை இயக்குநராக நியமிக்கப்படுவார்.
* சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம் உள்ளது.

No comments: