Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 18 December 2013

தனியார் நிறுவன காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (டிச.28) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தனியார் நிறுவனங்களில் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ், மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட், டெக்னீஷியன், ஆப்ரேட்டர், டிரெயினி, செக்யூரிட்டி காட்ஸ்,பி.பி.ஓ.வாய்ஸ், நான்வாய்ஸ்,ஐ.டி.டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீனிவாசா அவென்யூ சாலையில் உள்ள ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (டிச.28) காலை 10 மணிக்கு முகாம் தொடங்கும்.
8,10,12-ஆம் வகுப்பு, பி.ஏ. பி.எஸ்.சி. பி.காம். பட்டதாரி மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, கம்யூட்டர் படித்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்க தகுதியுடைவர்களாவர். இவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரக் குறிப்புடன் (பயோ-டேட்டா) நேரில் சென்று கலந்துகொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: