ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான, கேட் தேர்வை நாடு முழுவதும், 1.94 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள், ஜனவரி, 14ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மொத்தம், 3,335 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, கேட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு தேர்வுக்கு, 1.94 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தேர்வு முடிந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜன., 14ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, கேட் தேர்வுக்கு, 1.91 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.03.2026
3 hours ago
No comments:
Post a Comment