Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 14 November 2013

DGE: தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத நவ.,5 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நாமக்கல் மாவட்ட தனித்தேர்வர்கள் நவ., 15 முதல் நவ., 25-ம் தேதி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து தேர்வுக் கட்டணத்தையும் செலுத்திட வேண்டும். இந்த மையங்களிலேயே தனித்தேர்வர்களை புகைப்படம் எடுக்க இணைய புகைப்பட கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: