Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 15 July 2015

TRB: ASSIST. PROF.:Honble Chief Minister handed over appointment orders to the newly recruited Assistant Professors [Press Release No : 344 ]

[Press Release No : 344 ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (15.7.2015) தலைமைச் செயலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.  இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் 1006 நபர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்ய  தெரிவு செய்துள்ளது. 
அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட  1006  நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா இன்று 5 நபர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன்,  தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments: