Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 7 May 2014

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில்... சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், முதல் நாளான திங்கள்கிழமை ஏராளமான மாணவியர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
அரசு கல்லூரிகள்: தமிழகத்தில் 74 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 4 கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள கல்லூரிகள் விண்ணப்பங்கள் வழங்கும் பணியை விரைவில் தொடங்கும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் பொருத்த வரை குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற காலவரையோ, கட்டுப்பாடோ கிடையாது.
இதை அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்யும் என உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: