Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 11 May 2014

HSC: +2 தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது.

+2 மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி காலை 9 மணிக்‍கு அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது. 
21-ம் தேதி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்‍கொள்ளும்போது வேலைவாய்ப்பு பதிவையும் அங்கேயே செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 
மேலும், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்கோரி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு செல்லாமல் பள்ளிகளிலேயே இவற்றை வழங்கவும் நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: