Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 7 July 2015

தமிழக கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்க யு.ஜி.சி., முடிவு

தமிழகத்தில்ராணி மேரி கல்லுாரிபச்சையப்பா கல்லுாரி மற்றும் அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்டநான்கு கல்லுாரிகளுக்குவிரைவில் பாரம்பரிய கல்லுாரிக்கான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

இந்தியாவில், 100 ஆண்டுகள் பழமையான கல்லுாரிகளுக்குப் பல்கலை மானியக்குழுவானயு.ஜி.சி.சார்பில், 2013 முதல்பாரம்பரிய கல்லுாரிக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம்,சம்பந்தப்பட்ட கல்லுாரியின் பல மேம்பாட்டுப் பணிகளுக்குஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும்.
இந்த ஆண்டுஇந்த அந்தஸ்துக்குதமிழகத்தில் இருந்துசென்னை - ராணிமேரி கல்லுாரிபச்சையப்பா கல்லுாரிமதுரை - அமெரிக்கன் கல்லுாரிவேலுார் - ஊரீஸ் கல்லுாரிதிருச்சி - செயின்ட் ஜோசப் கல்லுாரி ஆகியவை உட்படநாடு முழுவதும், 190 கல்லுாரிகள் விண்ணப்பித்திருந்தன.
இவற்றைப் பரிசீலனை செய்தயு.ஜி.சி., 19 கல்லுாரிகளுக்குப் பாரம்பரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதில்தமிழகத்தில்திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியும் ஒன்று. தமிழகத்தில் மற்றநான்கு கல்லுாரி களுக்கும்நாக் எனப்படும் தேசிய தரநிர்ணய கவுன்சில் மூலம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல்நாக் அதிகாரிகள்இந்த நான்கு கல்லுாரிகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில்விரைவில் பாரம்பரிய கல்லுாரி அந்தஸ்து கிடைக்கும் எனயு.ஜி.சி.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
இந்நிலையில்திருச்சிசெயின்ட் ஜோசப் கல்லுாரி கட்டடங்களை சீரமைக்கபல்கலைக்கழக மானியக்குழு, 1.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

No comments: