Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 7 July 2015

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: இந்தாண்டு 1,510 பேர் தேர்வு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இணையவழி கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு 1,510 பேர் மட்டுமே சேர்ந்தனர்.
இதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 30 மையங்களில் நடைபெற்றது.
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்தக் கலந்தாய்வுக்கு வழங்கப்பட்டன.
இந்தக் கலந்தாய்வுக்காக 3,355 விண்ணப்பங்கள் விற்பனையாகின. 2,760 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அவர்களில் 1,510 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையே தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தப் படிப்பில் கடந்த ஆண்டு 2,500-க்கும் அதிகமான இடங்களில் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 1,510 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

No comments: