Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 4 March 2015

+2 பொதுத் தேர்வு : சந்தேகங்களை கேட்க, புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் நடைபெறும் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்களைக் கேட்கவும் புகார்களை தெரிவிக்கும் பொருட்டும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற 05.03.2015 அன்று தொடங்கி 31.03.2015 வரை நடைபெறவுள்ள  மேல்நிலைத் தேர்வுகள், 19.03.2015 அன்று முதல் 10.04.2015 வரை நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள்  தொடர்பாக  பொதுமக்கள் / மாணவர்கள் பயன்பெறுவதற்கு  அரசுத் தேர்வுத் துறையில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது  புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழு நேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.  தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையினை கீழ்க்காணும்  தொலைபேசி எண்களில் தெரிவித்து, தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தொடர்பு எண்கள்
1. 8012594101
2. 8012594116
3. 8012594120
4. 8012594125
இதனை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: