Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 16 February 2015

TNPSC: மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை தேர்வெழுதியவர் கவனத்துக்கு

மோட்டார் வாகன ஆய்வாளர் இரண்டாம் நிலை பதவிக்கான 17 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு எழுதியவர்களுக்கான நேர்காணலுக்கு டிஎன்பிஎஸ்சி அழைத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II பதவிக்கான 17 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 26.08.2012 மு.ப. அன்று நடத்தப்பட்டது.  
மேற்காண் தேர்வில் 1686 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர்.  அத்தேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 42 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.  நேர்காணல் தேர்வு 05.03.2015 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

No comments: