Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 24 October 2014

DGE: பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: நாளை மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் சனிக்கிழமை (அக்.25) வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல்: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், அரசுத் தேர்வுத் துறை சிறப்பு மையங்களுக்கு அக்டோபர் 27 முதல் 29-ஆம் தேதி வரை நேரில் சென்று ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: