பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த
ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. சுமார் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது:
பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment