கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான 29 இடங்களும் ஒருசில மணி நேரங்களிலேயே நிரம்பின.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் பி.வி.எஸ்.சி. படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான 29 இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் என 99 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்கள், விளையாட்டுப் பிரிவின் கீழ் 5 (மகளிர் -3, ஆண்கள் -2) இடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 2 இடங்கள், பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான 14 இடங்கள் என மொத்தம் 29 இடங்களும் முழுமையாக நிரம்பின.
கலந்தாய்வின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (ஜூலை 31) பி.வி.எஸ்.சி. படிப்பில் உள்ள 251 இடங்களில் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
கடைசி நாளான ஆகஸ்ட் 1-ஆம் தேதி பி.டெக். உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகளில் அனைத்துப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment