கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு 2014ஐ இந்த முறை எழுதுபவர்களுக்கு கேள்விகளை அணுக கூடுதலாக 30 நிமிடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு இந்த வருடம் நவம்பர் 16,22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகளில் இந்த முறை கேள்விகளும் கூடும், அதற்கேற்ப நேரமும் கூட்டப்பட்டுள்ளது. அதன்படி, கேள்விகளை அணுக வசதியாக 30 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னர் 140 நிமிடங்கள் என்று இருந்த நிலையில், இந்த வருடம் 170 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐஐஎம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment