Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 9 June 2014

மீன்வளப் படிப்புக்கு ஜூன் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. அறிவிப்பு

இளங்கலை மீன்வள படிப்புக்கு (பி.எப்.எஸ்சி.) ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 10-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பல் கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி எஸ்.ஏ.சண்முகம் அறிவித்துள்ளார்.
படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் (www.tnfu.org.in) இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் ஏதும் வினியோகிக்கப்படவில்லை. விண்ணப்பக் கட்டணமாக ரூ.600-ஐ (எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.300) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டவாறு டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய பல்கலைக்கழக அலுவலகத்தை 04365-240449 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: