Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 12 May 2014

மே 17-ல் சென்னையில் பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பை முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சனிக்கிழமை (மே 17) நடைபெற உள்ளது.
பார்வை குறைபாடுள்ள இளைஞர்களால் நடத்தப்படும் -சென்னை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் திருஷ்டி- அமைப்பும், -எல்.சி. நாகப்பட்டினம்- எனும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அமைப்பும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்துகின்றன.
மாநிலக் கல்லூரியில் உள்ள பவல் அரங்கில் காலை 9.30லிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த பயிலரங்குக்கு அனுமதி இலவசமாகும்.

இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், வங்கி, காப்பீடு, நிதி நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம், உபசரிப்பு உள்ளிட்ட சேவை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களை மே 15-ஆம் தேதிக்குள் செல்பேசி மூலமோ அல்லது மின் அஞ்சல் மூலமோ தொடர்புகொண்டு பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தொடர்புக்கு:
பேராசிரியர் கே. ரகுராமன்  - 9840018012,  rcdrishti@gmail.com
எஸ். அஷோக்  குமார் ,  9842919357,  lcprojectnp@gmail.com,
மாரிமுத்து,  9840915796,  marimuthushanmugam14@gmail.com

No comments: