Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 19 March 2014

பொறியியல் பகுதி நேர படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

2014-15ஆம் கல்வி ஆண்டில் பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை,  கோவை உட்பட 10 இடங்களில் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திலும், நெல்லை, கோவை, சேலம், வேலூர் அரசு பொறியியல் கல்லூரிகலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
கோயம்பத்தூர் இன்டிஸ்டியுட் ஆப் டெக்னாலஜி கல்லூரியிலும், காரைக்குடியில் அழகாப்பா செட்டியார் பொறியியல் கல்லூரியிலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்க ஏப்ரல் 7ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த தகுதி உள்ள மாணவர்களுக்கு மே மாதம் கலந்தாய்வு நடைபெறும்.

No comments: