Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 28 February 2014

TRB-TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை:பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

2012-ல் ஆ‌சிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாரூரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, இது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

No comments: