Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 21 April 2012

பீகார் மாநில ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத 151 ஆசிரியர்கள் நீக்கம்

பாட்னா: பீகார் மாநில கல்வித்துறை நடத்திய தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற தவறிய 151 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநில அரசு மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கும் நோக்கத்தில் 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தியது.
இதில் ஆங்கிலம், கணிதம், இந்தி மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் ஐந்தாம் வகுப்பு தரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்ட பீகார் கல்வித்துறை 151 ஆசிரியர்கள் தேர்ச்சிப் பெற தவறியதாக கூறியது. அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துள்ளது.

No comments: