Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 8 August 2015

TRB: கலை ஆசிரியர் தேர்வு ரத்து; டி.ஆர்.பி., புது முடிவு

அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பைதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி.திடீரென ரத்து செய்துள்ளது;விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில்ஓவியம்தையல்இசை மற்றும் உடற்கல்விப் பாடப்பிரிவுகளில் காலியாக இருந்த, 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2013ல்டி.ஆர்.பி.அறிவிப்பு வெளியிட்டது. மாநில அளவில்,வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில்தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுசான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது.
ஆனால்இந்த நடவடிக்கையை எதிர்த்துபட்டதாரிகள்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்தசென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைபோட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனஉத்தரவிட்டது. ஜனவரியில்கலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்துக்குஅரசு ஒப்புதல் அளித்தது. ஆனால்இந்தப் பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில்இரண்டு ஆண்டுகளாக இழுபறியில் இருந்தஇந்த தேர்வுக்கான அறிவிப்பை திடீரென ரத்து செய்துடி.ஆர்.பி.உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைடி.ஆர்.பி.உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி பிறப்பித்துள்ளார். மேலும்போட்டித் தேர்வு அறிவிப்பு புதிதாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

No comments: