Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 13 February 2015

TNPSC: முதல்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்துக்கு...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2014 அன்று முற்பகல் தொகுதி-I ல் அடங்கிய 79 பதவிகளுக்கான முதனிலை எழுத்து தேர்வினை நடத்தியது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,389 விண்ணப்பதாரர்களுக்கும்  தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய சான்றிதழ்களின் விவரம், மற்றும் தேர்வுக் கட்டணம் தொடர்பான குறிப்பாணை, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.
மேலும் அக்குறிப்பாணை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான  www.tnpsc.gov.in - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு பதிவு எண்ணை (Examination Register Number) உள்ளீடு செய்து குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அக்குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ள சான்றிடப்பட்ட சான்றிதழ்களின் நகலினை 17.02.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments: