TRB-TNTET தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்.
ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, மே, 6 முதல், 12ம் தேதி வரை, 28 மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த முகாமில், ஏற்கனவே உள்ள, 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளிக்க, சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்களுக்கு, டி.ஆர்.பி., உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது, 'கிரேடு' முறையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், 'தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம்' என, டி.ஆர்.பி., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment