மாற்றுத் திறனாளர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
இத் தேர்வுக்காக சென்னையில் 6 மையங்கள் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்டத்தில் 508 மாற்றுத் திறனாளர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுகின்றனர்.
இதற்காக திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர் லேடி சிவசாமி மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிவரை இந்தத் தேர்வு நடக்க உள்ளது. இதற்காக 396 சொல்வதை எழுதும் ஆரியர்கள், 6 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 6 துறை அலுவர்கள், 6 கூடுதல் துறை அலுவலர்கள், 79 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 50 அலுவலகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment