Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 28 May 2014

CBSE: பிளஸ் 2: முதல்முறையாக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறை அறிமுகம்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் முதல்முறையாக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை விடைத்தாள் மறுகூட்டல் மட்டுமே அமலில் இருந்தது.
விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். மறுமதிப்பீட்டுப் பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 2 வாரங்களுக்குள் விநியோகிக்கப்படும். வழங்கப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை வைத்தே உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் சுதர்சனராவ் கூறியுள்ளார்.

No comments: