Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 24 May 2014

இன்றைய தினத்தின் சிறப்புகள் (மே 24)

கோப்பர்னிக்கஸ் மறைந்த தினம்
சூரியன், கோள்கள் மற்றும் விண்மீன்கள் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன என்ற தாலமியின் கோட்பாடுதான் 15-ம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டு வந்தது. அக்கோட்பாட்டைத் தவறு என நிரூபித்தவர் கோப்பர்னிக்கஸ்.
சூரியனை மையமாக்கொண்டுதான் கோள்கள் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை அளித்தவர் கோப்பர்னிக்கஸ். கத்தோலிக்க மதக் குருவாக இருந்த கோப்பர்னிக்கஸ், ஆன் த ரெவல்யூஷன்ஸ் ஆஃப் த ஹெவன்லி பாடீஸ் (On the Revolutions of the Heavenly Bodies) என்ற நூலில் சூரிய மையக் கோட்பாட்டைப் பற்றி விளக்கியுள்ளார். வானியல் வல்லுனர், கத்தோலிக்க மதகுரு, கணிதவியலாளர் என பன்முகம் கொண்ட கோப்பர்னிக்கஸ் 1543-ம் ஆண்டு இதே நாளில்தான் மரணமடைந்தார்.

முதல் தந்தி செய்தி அனுப்பிய தினம்
செய்தியை அனுப்ப புறாக்களையும், மனிதர்களையும் பயன்படுத்திய காலத்தில், மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்று நிரூபித்தவர் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் மோர்ஸ். 1837-ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த மின்சாரத் தந்தி, தகவல் தொடர்பில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
எனவே தான், இவர் கண்டு பிடித்த கருவி அவரின் பெயராலேயே, மோர்ஸ் கருவி என்று அழைக்கப்படுகிறது. 1844-ம் ஆண்டு இதே நாளில்தான், உலகின் முதல் தந்தி செய்தியை வாஷிங்டன் டி.சி-யிலிருந்து, பல்டிமோருக்கு சாமுவேல் மோர்ஸ் அனுப்பினார்.

No comments: