Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 9 May 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த பயமா? 104-ஐ அழைக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த பயமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் 104 சேவை எண்ணை அழைத்து ஆலோசனை பெறலாம்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியாகின்றன. இந்நிலையில் தேர்வில் தோல்வி பயம், குறைவான மதிப்பெண் பெற்றதால் மன அழுத்தம், எதிர்காலம் குறித்த பயம் ஏற்பட்டால் மாணவர்கள் 104 சேவை எண்ணை அழைக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து 104 தொலைபேசி சேவை அதிகாரிகள் கூறியது:

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் குறித்த பயம், மன அழுத்தம் ஏற்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சிறப்பு மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆலோசகர் தவிர 3 மன நல ஆலோசகர்கள் தேர்வு முடிவு வெளியாகும் தினம் பணியாற்றுவார்கள்.
மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள், மாணவர்களின் உறவினர்கள் என அனைவரும் தொலைபேசியில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments: