Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 25 December 2013

மாநில அதிகாரிகள் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு தேர்வு

மாநில குடிமைப்பணி அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி அதிகாரிகளாக மாறுவதற்கு தேர்வு நடத்தப்படும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான எழுத்துத்தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட 4 வகையான தேர்வு முறைகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நடைமுறை குறித்து ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டிருந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வருங்காலங்களில் மாநில குடிமைப்பணி அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்டையில் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளாக மாற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments: