Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 1 October 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு


இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது. வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். 
 
பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார். 
 
அனைத்து தரப்பினரின் வாதத்தையும் கேட்ட விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்துவழக்கு மீண்டும் ஒத்திவைத்தார். அக்-1 இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என மனுதாரரின் வழக்கறிஞர் லூயிஸ் தெரிவித்தார்.

No comments: